சாலை சீரமைப்பு பணி துவக்காமல் வாகன ஓட்டிகள் அவதி !

சாலை சீரமைப்பு பணி துவக்காமல் வாகன ஓட்டிகள் அவதி !

ஜல்லிக்கற்கள்

கிடப்பில் போடப்பட்ட சாலை சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை
காஞ்சிபுரம் ஓரிக்கை மிலிட்டரி சாலையில் இருந்து, சின்ன காஞ்சிபுரம் பகுதிக்கு செல்வோர் சதாவரம் பிரதான சாலை வழியாக சென்று வருகின்றனர். இச்சாலையில் பல்வேறு அரசு அலுவலகங்கள், குடியிருப்புகள் உள்ளன. கடந்தாண்டு வடகிழக்கு பருவமழையின் போது, இச்சாலையில் ஆங்காங்கே சாலை சேதமடைந்த நிலையில் இருந்து, இச்சாலையை மாநகராட்சி சார்பில்,தற்காலிகமாக சீரமைக்க ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு சமன்படுத்தப் பட்டுள்ளது. ஆனால், சீரமைப்பு பணியை துவக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். இதனால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகனங்கள் பஞ்சராகின்றன. எனவே, கிடப்பில் போடப்பட்ட சாலை சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்."

Tags

Next Story