கல் குவாரி பள்ளத்தை சுற்றி இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்க கோரிக்கை

கல் குவாரி பள்ளத்தை சுற்றி இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்க கோரிக்கை

செங்கல்பட்டில் பயன்பாட்டில் இல்லாத கல் குவாரி பள்ளத்தை சுற்றி இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.


செங்கல்பட்டில் பயன்பாட்டில் இல்லாத கல் குவாரி பள்ளத்தை சுற்றி இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம்,சிங்கபெருமாள் கோவில் அடுத்த ஆப்பூர் கிராமத்தில், வனப்பகுதிக்கு உட்பட்ட பகுதியில், பயன்பாட்டில் இல்லாத கல் குவாரி பள்ளம் உள்ளது. இது, 500அடி வரை ஆழம் உடையது. இதில், தண்ணீர் நிரம்பி வழிவதால், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவில், ஒரகடம் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து, இளைஞர்கள் திரள்கின்றனர்.

இங்கு, வார இறுதி நாட்களில் வரும் இளைஞர்கள், காடுகளுக்கு அருகில் அடுப்பு மூட்டி சமையல் செய்து சாப்பிட்ட பின், மது போதையில் கல் குவாரி பள்ளத்தில் குளித்து வருகின்றனர். மேலும், கல் குவாரி பள்ளம் குறித்து விழிப்புணர்வு இல்லாத பெற்றோரும், குழந்தைகளுடன் வந்து துணி துவைப்பது, நீச்சல் பழகுதல் போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். இதனால், உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: இந்த கல் குவாரி பள்ளம் அருகில் குடியிருப்புகள் ஏதும் இல்லாததால், ஆபத்து காலங்களில் காப்பாற்றக் கூட ஆட்கள் யாரும் இருக்க மாட்டர்.

இதில் குளிக்க வேண்டாம் என, எச்சரிக்கை செய்யும் போது, யாரும் கண்டுகொள்வதில்லை. கடந்த வாரம் வாலிபர் ஒருவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். எனவே, இந்த கல் குவாரி பள்ளத்தை சுற்றி இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story