பிளாஸ்டிக் இல்லாத பசுமையான ஏற்காட்டை உருவாக்க வேண்டுகோள்

பிளாஸ்டிக் இல்லாத பசுமையான ஏற்காட்டை உருவாக்க வேண்டுகோள்

 பிளாஸ்டிக் இல்லாத பசுமையான ஏற்காட்டை உருவாக்க வேண்டும் என சுற்றுலா பயணிகளுக்கு கலெக்டர் பிருந்தாதேவி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

பிளாஸ்டிக் இல்லாத பசுமையான ஏற்காட்டை உருவாக்க வேண்டும் என சுற்றுலா பயணிகளுக்கு கலெக்டர் பிருந்தாதேவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

"பசுமை ஏற்காடு" திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் பயன்பாடற்ற ஏற்காட்டை உருவாக்கும் வகையிலான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் பிருந்தாதேவி தலைமையில் நடந்தது.

இக்கூட்டத்தில் ஏழைகளின் ஊட்டியாக திகழும் ஏற்காட்டில் இயற்கை வளங்களை மென்மேலும் மேம்படுத்தும் வகையிலும், பிளாஸ்டிக் பயன்பாடுகளை தவிர்த்து அதற்கு பதிலாக மாற்றுப்பொருட்களின் பயன்பாட்டை அதிகரிப்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் கலெக்டர் பிருந்தாதேவி பேசியதாவது:- மிக முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றான ஏற்காட்டின் இயற்கையை மென்மேலும் மேம்படுத்தும் வகையில் அதிக அளவிலான மரக்கன்றுகளை வனத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் நடவு செய்யவும், ஏற்காட்டின் சுற்றுச்சுழலை மேம்படுத்தவும், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடுகளை தவிர்த்து மாற்றுப்பொருட்களின் பயன்பாட்டினை அதிகரிக்க செய்ய வேண்டும். ஏற்காட்டில் உருவாகும் திடக்கழிவுகளை மறுசுழற்சி செய்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி "பசுமை ஏற்காடு" திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அறிவுறுத்தல் இதில் மாவட்ட கலெக்டர் திட்டக்குழுவின் தலைவராகவும், மாவட்ட வன அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ஆகியோர்களை செயலாளர்களாகவும், மகளிர் திட்ட இயக்குனர், மாவட்ட சுற்றுலா அலுவலர், தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர்களை உறுப்பினர்களாக கொண்டு செயல்படுத்தப்படுகிறது.

குறிப்பாக, ஏற்காடு பகுதியில் அமைந்துள்ள தனியார் தங்கும் விடுதி, உணவு விடுதிகள், கடைகள், வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பையாக தரம் பிரித்து முறையாக அப்புறப்படுத்துவதற்கு தேவையான கருத்துருக்களை தயாரித்து செயல்படுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடுகளை முற்றிலும் தடைசெய்து, அதற்கான மாற்று பொருட்களான மஞ்சள் பை உள்ளிட்டவைகளின் பயன்பாடுகளை ஊக்குவித்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பிளாஸ்டிக் பயன்பாடற்ற பசுமையான ஏற்காட்டினை உருவாக்கி, ஏற்காட்டின் பசுமை சூழலை பாதுகாத்திட சுற்றுலாப்பயணிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் முழு ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags

Next Story