பக்தர்களுக்கு அடிப்படை வசதி செய்து தர கோரிக்கை !

பக்தர்களுக்கு அடிப்படை வசதி செய்து தர கோரிக்கை !

அருணாசலேஸ்வரர் கோவில்

அறநிலையத்துறை சிறப்பு மருத்துவமனை மையத்தை அருணாசலேஸ்வரர் கோவிலுக்குள் மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்காக கோவில் வளாகத்தில் கொடிமரம் எதிரே நிரந்தர மருத்து முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு மாரடைப்புக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவ உபகரணங்கள் இல்லை. அறநிலையத்துறை சார்பில் கோவிலின் அம்மணி அம்மன் கோபுரம் அருகில் டாக்டருடன் கூடிய சிறப்பு மருத்துவ மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவ மையத்தை கோவிலுக்குள் மாற்றினால் உயிர் இழப்புகளை தடுக்கலாம் என்று பக்தர்கள் கருதுகின்றனர்.இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story