கந்தர்வகோட்டையில் இலவச அமரர் ஊர்தி சேவை வழங்க கோரிக்கை!

கந்தர்வகோட்டையில் இலவச அமரர் ஊர்தி சேவை வழங்க கோரிக்கை!

இலவச அமரர் ஊர்தி 

கந்தர்வகோட்டை பகுதிக்கு இலவச அமரர் ஊர்தி சேவை வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கந்தர்வகோட்டை பகுதிக்கு இலவச அமரர் ஊர்தி சேவை வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கந்தர்வகோட்டை சட்டப்பேரவை தொகுதியின் தலைமையிடமாகவும், அரசு தலைமை மருந்துவமனை, புதுநகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வீரடிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வெள்ளாள விடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை உள்ளன.

இப்பகுதிகளில் ஏற்படும் சாலை விபத்து, விஷ ஜந்துகள் தீண்டு போன்றவற்றுக்கு சிகிச்சை பெற இம்மருந்துவமனைகளுக்கு வருபவர்கள் மரணம் அடைந்தால்,உடற்கூறாய்வுக்கு தஞ்சை, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லவேண்டிய சூழல் உருவாகிறது.

இவ்வாறு இருக்கும்போது கந்தர்வகோட்டை நகரை மையமாக வைத்து இலவச அமரர் ஊர்தியை அரசு வழங்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள். எனவே மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுத்து உடனடித் தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

Tags

Next Story