சுகாதாரமான குடிநீர் வழங்க கோரிக்கை

சுகாதாரமான குடிநீர் வழங்க கோரிக்கை

பழனி பாதயாத்திரை 

பழநி தைப்பூச பாதயாத்திரை பக்தர்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டுமென வாசன் பாசறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்ட வாசன் பாசறை தலைவர் மணிக்கண்ணன் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: பழநி வரும் பக்தர்களுக்கு தூய்மையான குடிநீர் வழங்க வேண்டும். நகரில் உள்ள ஹோட்டல்களில் விலை பட்டியல் வைக்க நடவடிக்கை வேண்டும். திருவிழாக் காலங்களில் சிற்றுண்டி கடைகளில் சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு நடத்த வேண்டும். காலவதியான உணவுப்பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

Tags

Next Story