பழுதான குடிநீர் தொட்டி அகற்ற கோரிக்கை

பழுதான குடிநீர் தொட்டி அகற்ற கோரிக்கை

திருவள்ளூர் மாவட்டம் பொன்னாங்குளத்தில் பழுதான குடிநீர் தொட்டி அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது.


திருவள்ளூர் மாவட்டம் பொன்னாங்குளத்தில் பழுதான குடிநீர் தொட்டி அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது.
திருவாலங்காடு ஒன்றியம் பொன்னாங்குளம் ஊராட்சி காலனி பகுதியில் 20 ஆண்டுக்கு முன் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இந்த தொட்டி கடந்த, 2020ம் ஆண்டு மிகவும் பழுதடைந்த காரணத்தால், அதே பகுதியில் மற்றொரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு தற்போது பயன்பட்டில் உள்ளது. இந்நிலையில் பயன்பாட்டில் இல்லாத தொட்டி அகற்றப்படாததால் தற்போது சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுகிறது. சிறுவர்கள் விளையாடும் பகுதி மற்றும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால் எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சம் உள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். பயன்பாட்டில் இல்லாத மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்ற மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags

Next Story