பழுதடைந்த தார் சாலையை சீரமைக்க கோரிக்கை

பழுதடைந்த  தார் சாலையை சீரமைக்க கோரிக்கை

சாலைகள் சீரமைக்க கோரிக்கை

சேலம் மாவட்டம், அண்ணமார் கோயில் செல்லும் பழுதடைந்த தார் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட தேவூரிலிருந்து அண்ணமார் கோயில் செல்லும் தார் சாலையை உள்ளாட்சி நிர்வாகம் சீரமைக்க வேண்டுமென விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேவூரிலிருந்து அண்ணமார் கோயில் செல்லும் தார் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ள நிலையில் அச்சாலை வழியாக சுண்ணாம்புகரட்டூர், பாருச்சிம்பாளையம், காவேரிப்பட்டி, கே.மேட்டுப்பாளையம், வெள்ளைபிள்ளையார்கோயில், கைக்கோலபாளையம், சென்றாயனூர் உள்ளிட்ட கிராமப்பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள், விவசாயிகள் இரு சக்கர வாகனத்தில் செல்வதற்கும், விளை பொருள்களை விற்பனை செய்ய சந்தைகளுக்கு கனரக வாகனங்களில் எடுத்து செல்ல சிரமம் அடைந்து வருகின்றனர்.

எனவே பழுதடைந்த தார் சாலையை சீரமைக்க வேண்டுமென விவசாயிகள், பொதுமக்கள் உள்ளாட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story