மின் கம்பத்தை சீரமைக்க கோரிக்கை

மின் கம்பத்தை சீரமைக்க கோரிக்கை

மின் கம்பம் 

கோவிந்தவாடி கிராமத்தில் சாய்ந்த மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.
காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி கிராமம் வழியாக, விருதசீர நதி செல்கிறது. இந்த நதியின் குறுக்கே, மின் வழித்தடம் செல்கிறது. இந்த மின் வழி தடத்தில் செல்லும் மின்சாரத்தை பயன்படுத்தி, விவசாயத்திற்கு தண்ணீரை இரைத்து, விவசாயிகள் சாகுபடிக்கு பயன்படுத்தி வருகின்றனர். கடந்த நவம்பர் மாதம், வட கிழக்கு பருவ மழைக்கு, விருதசீர நதியில் இருந்த மின் கம்பம் உடைந்து சாய்ந்தது. அதன் பிறகு, புதிய மின் கம்பத்தை மாற்ற சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என, விவசாயிகள் இடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், விருதசீர நதி குறுக்கே செல்லும் ஆடு, மாடுகள் மின் வழித்தடத்தில் இருக்கும் கம்பியில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, விருதசீர நதி ஆற்றின் குறுக்கே, சேதம் ஏற்பட்டிருக்கும் மின் கம்பத்தை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story