விராலிமலையில் குழிகள் உள்ள சாலை சீரமைக்க கோரிக்கை!

விராலிமலையில் குழிகள் உள்ள சாலை சீரமைக்க கோரிக்கை!

விராலிமலையில் புதிதாக போடப்பட்ட சாலை குழிகள் உள்ளதால் சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விராலிமலையில் புதிதாக போடப்பட்ட சாலை குழிகள் உள்ளதால் சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விராலிமலையில் இருந்து கீரனுார் செல்லும் சாலையில் இருந்து வில்லாருடை வழி யாக மதியாணைப்பட்டிக்கு தார்ச்சாலை அமைக் கப்பட்டுள்ளது. சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த சாலையில் இப்போது ஜல் லிக்கற்கள் பெயர்ந்து ஆங்காங்கே குண்டும், குழி யுமாக காணப்படுகிறது.

இதனால் சாலையை பயன்படுத்தி வரும் பள்ளி மாணவ, மாணவிகள், இருசக்கர வாகன ஓட்டுனர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதுதொடர்பாக அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. இனியாவது இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story