பல்லாங்குழி சாலை சீரமைக்க கோரிக்கை !

பல்லாங்குழி சாலை சீரமைக்க கோரிக்கை !

 சாலை

சேதமடைந்த சாலையை விரைவில் சீரமைக்க அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருமயம் ஒன்றியம் நச்சாந்துபட்டியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் கோட் டூருக்கு செல்லும் 2 கி.மீ துாரமுள்ள தார்ச்சாலை பல இடங்களில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும்,குழியுமாக உள்ளது. இதனால் சைக்கிளில் செல்லும் மாணவ, மாணவிகள், இருசக்கர வாகன ஓட்டுனர்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். மேலும், வாகனங்களும் அடிக்கடி பஞ்சராகி விடுகின்றன. சைக்கிளில் செல்லும் பெண்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வரு கின்றனர். சேதமடைந்த சாலையை விரைவில் சீரமைக்க அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story