மீண்டும் மன்னார்குடி - மானாமதுரை ரயிலை இயக்க கோரிக்கை

மீண்டும் மன்னார்குடி - மானாமதுரை ரயிலை இயக்க கோரிக்கை

பைல் படம்


மன்னார்குடி - மானாமதுரை ரயிலை மீண்டும் இயக்க பொதுமக்கள் கோரிக்கை எழுந்துள்ளது.

மன்னார்குடியில் இருந்து மானாமதுரை வரை ரயில் இயக்கப்பட்டு வந்தது. மன்னார்குடியில் இருந்து காலை 6:30 மணிக்கு புறப்படும் ரயிலானது நீடாமங்கலம் தஞ்சாவூர் பொன்மலை வழியாக திருச்சிக்கு காலை 9:10க்கு வரும். மீண்டும் திருச்சியிலிருந்து காலை 10:15 மணிக்கு புறப்பட்டு கீரனூர் புதுக்கோட்டை காரைக்குடி சிவகங்கை வழியாக மானாமதுரைக்கு மதியம் 1:20 க்கு வந்து, மறு மார்க்கமாக மானாமதுரையில் இருந்து மதியம் 2:15 மணிக்கு புறப்பட்டு காரைக்குடி வழியாக மன்னார்குடிக்கு இரவு 8:15 மணிக்கு சென்றடையும்.

இந்த ரயிலை பொதுமக்கள் மாணவர்கள் என பலர் பயன்படுத்தி வந்தனர். மானாமதுரை சந்திப்பில் இருந்து மதுரை விருதுநகர் ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து வரும் பயணிகள், காரைக்குடிக்கு வந்து செல்ல ஏதுவாக இந்த ரயில் இருந்தது. கடந்த 4 மாதங்களாக இந்த ரயில் மானாமதுரை வரை செல்லாமல் காரைக்குடி வரை மட்டுமே வந்து செல்கிறது. மீண்டும் மானாமதுரை வரை ரயிலை நீட்டிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tags

Next Story