ஒரத்தநாடுக்கு பட்டுக்கோட்டையில் இருந்து  மாணவிகளுக்கு சிறப்பு பேருந்து இயக்க கோரிக்கை 

ஒரத்தநாடுக்கு பட்டுக்கோட்டையில் இருந்து  மாணவிகளுக்கு சிறப்பு பேருந்து இயக்க கோரிக்கை 

சிறப்பு பேருந்து

என்கான்ஸ் சுற்றுச்சூழல் சங்கம் சார்பில் சிறப்பு பேருந்து இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
ஒரத்தநாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் பயன்பெறும் வகையில் பட்டுக்கோட்டையில் இருந்து மாணவிகளுக்கான சிறப்பு பேருந்து இயக்க வேண்டும் என பட்டுக்கோட்டை என்கான்ஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் சார்பில், தமிழக முதல் அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை என்கான்ஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தின் மார்ச் மாத உறுப்பினர்கள் கூட்டம் ஆலோசகர் வ.விவேகானந்தம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், நிர்வாகிகள் ஜெயசீலன், ரெஜினால்டு செல்வகுமார், எம்.எம்.சுகுமார், ஈகா.வைத்தியநாதன், மா.வீரபத்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர் . கூட்டத்தில், பட்டுக்கோட்டையில் இருந்து ஒரத்தநாட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு சிரமம் இல்லாமல் மாணவிகள் செல்லும் வகையில் சிறப்பு பேருந்தை கட்டணத்துடன் இயக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags

Next Story