பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்க கோரிக்கை

பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்க  கோரிக்கை

பேருந்து நிலையம் அமைக்க கோரிக்கை 

செங்கல்பட்டு மாவட்டம், சோத்துபாக்கம் சாலையில் பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்க கோரிக்கை பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சித்தாமூர் பகுதியில் உள்ள மதுராந்தகம் - சூணாம்பேடு மற்றும் செய்யூர் - சோத்துப்பாக்கம் சாலை சந்திப்பில், பேருந்து நிறுத்தம் உள்ளது. சித்தாமூர் பகுதியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், காவல் நிலையம், வட்டார வளர்ச்சி அலுவலகம், வேளாண்மைத் துறை அலுவலகம், அஞ்சலகம், வங்கி போன்றவை செயல்படுகின்றன.

மேலும், ஏராளமான கடைகள் உள்ளன.ஆகையால், தினசரி மதுராந்தகம், செங்கல்பட்டு, சூணாம்பேடு போன்ற பகுதிகளுக்கு செல்லும் நுாற்றுக்கணக்கானோர் இந்த சாலை சந்திப்பில் உள்ள பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்துகின்றனர்.

போளூர் - செய்யூர் சாலை விரிவாக்கப்பணிக்காக, மதுராந்தகம் - சூணாம்பேடு சாலையில் இருந்த பேருந்து நிறுத்த நிழற்குடை அகற்றப்பட்டது. விரிவாக்கப்பணிகள் முடிந்த நிலையில், புதிய பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்கப்படாததால், இப்பகுதிவாசிகள் வெயிலில் பேருந்திற்காக காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story