வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டி அமைக்க கோரிக்கை

வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டி அமைக்க  கோரிக்கை

தண்ணீர் தொட்டி 

செங்கம் பகுதியில் உள்ள வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவில் தரை காடுகள் உள்ளன. காப்புக்காடுகளில் மான், காட்டுப்பன்றி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளது. விலங்குகள் கோடை காலங்களில் தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றது. இதனை தடுக்க வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகளை அமைத்து ,தண்ணீரை நிரப்ப வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story