தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தனியார் பேருந்துகள்  மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவரும் தனியார் பேருந்துகள் மீது பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவரும் தனியார் பேருந்துகள் மீது பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தென் தமிழகத்தின் மையமாக திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது இந்தப் பேருந்து நிலையத்திலிருந்து இரவு பகலாக ஏராளமான பயணிகள் குடும்பத்துடன் பயணம் செய்து வருகின்றனர். இரவு நேரத்தில் பயணிகளை பேருந்தில் இருந்து பயணிகள் இறங்கியவுடன் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் அவர் அவர்கள் அலுவலகத்திற்கு கொண்டு செல்வது வழக்கம். ஆனால் தற்பொழுது பயணிகளை இறக்கிய பின்பு பேருந்துகளை அலுவலகங்களுக்கு கொண்டு செல்லாமல் பேருந்து நிலையத்திலேயே பேருந்துகளின் விளக்கை அணைத்து நிறுத்தி விடுகின்றனர். இதனால் இரவு நேரங்களில் பயணிக்கும் பயணிகளிடம் தங்கள் பாணியில் கைவரிசை காட்டும் நபர்கள் பயணிகளிடம் தேவையான பொருள்களை எடுத்த பின்பு பொதுமக்கள் மற்றும் பயணிகள் விரட்டிச் செல்லும் பொழுது பேருந்து நிலையத்தில் விளக்கை அணைத்து உள்ள பேருந்துகளுக்குளள்ளும் மறைவிலும் தஞ்சம் அடைந்து விடுகின்றனர்.

Tags

Next Story