ஆபத்தான மரக்கிளைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஆபத்தான மரக்கிளைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

குமாரபாளையத்தில் ஆபத்தான மரக்கிளைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


குமாரபாளையத்தில் ஆபத்தான மரக்கிளைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம்குமாரபாளையம் இடைப்பாடி சாலையில் பல மரங்கள் நன்கு வளர்ந்து, படர்ந்து உள்ளது. இதன் ஒரு சில மரங்களில் பெரிய அளவிலான கிளைகள் பாரம் தாங்காமல் ஒடிந்து சாலையில் விழும் நிலையில் உள்ளது. இதனால் விபத்து அபாயம் ஏற்படும் நிலையில் உள்ளதுடன், பொதுமக்கள் அச்சத்துடன் செல்லும் நிலையில் இருந்து வருகின்றனர். ஆகவே ஆபத்தான இந்த மரக்கிளைகளை உடனே அப்புறப்படுத்தி, விபத்து அபாயம் நீங்கவும், பொதுமக்கள் அச்சமின்றி செல்லவும் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story