அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த கோரிக்கை

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த கோரிக்கை

பைல் படம்

கோனாப்பட்டு, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்துமாறு கோரிக்கை வலுத்துள்ளது.

திருமயம் ஒன்றியம் கோனாபட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இதன்மூலம் 7 ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் பயன்பெற்று வருகின்றனர். 2 டாக்டர்கள், 15 பணியாளர்கள் பணிபுரிகின்றனர். சுகாதார நிலைய வளாகத்தில் முட்புதர்கள் மண் டியுள்ளன. மேலும் மின்விளக்குகள் எரியாததால் இரவு நேரத்தில் பாம்பு உள்ளிட்ட விஷசந்துக்கள் நடமாட்டம் காணப்படுகிறது.

பழுதடைந்துள்ள மின் விளக்குகளை சீரமைக்கவும், முட்புதர்களை அகற்றவும், சுகாதார நிலையத்தை மேம்படுத்தி 24 மணி நேரம் செயல்படும் வகையில் தரம் உயர்த்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story