வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருட்கள் அனுப்புவதை ஆட்சியர் ஆய்வு !

வாக்குச்சாவடிகளுக்கு தேவையான   பொருட்கள் அனுப்புவதை ஆட்சியர் ஆய்வு !

ஆட்சித்தலைவர் ஶ்ரீதர்

கல்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருட்கள் அனுப்பி வைப்பதை ஆட்சியர் ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருட்கள் அனுப்பி வைக்கப்படுவது குறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீதர் இன்று காலை நேரில் பார்வையிட்டு தெரிவிக்கையில்,இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுவதையொட்டி வாக்குப்பதிவு நடைபெறுவதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

அதன் ஒருபகுதியாக வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் பைகளில் அடைத்து மண்டல அலுவலர்கள் மூலமாக வழங்கப்படும் பணியினை இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இப்பணியினை விரைந்து முடிந்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஶ்ரீதர் தெரிவித்தார்.

Tags

Next Story