கெங்கவல்லி அருகே 12 அடி நீள மலைப்பாம்பு மீட்பு

கெங்கவல்லி அருகே 12 அடி நீள மலைப்பாம்பு மீட்பு
மலை பாம்பு
கெங்கவல்லி அருகே 12 அடி நீள மலைப்பாம்பு மீட்கப்பட்டது.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே ஜங்கமசமுத்திரத்தை சேர்ந்தவர் சக்தி, 42. நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு, அவரது வீட்டில் பெரிய அளவில் பாம்பு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

அவர் தகவல்படி, கெங்கவல்லி தீயணைப்பு நிலைய அலுவலர் செல்லபாண்டியன்(பொ) தலைமையில் வீரர்கள், இரவு, 10:30 மணிக்கு வந்து பார்த்தபோது மலைப்பாம்பு என தெரிந்தது.ஒரு மணி நேரத்துக்கு பின், அந்த பாம்பை உயிருடன் பிடித்தனர். பின், 12 அடி நீள பாம்பை, கெங்கவல்லி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Tags

Next Story