குற்றாலம் மெயின் அருவியில் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மீட்பு !

குற்றாலம் மெயின் அருவியில் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மீட்பு !

மலைப்பாம்பு 

குற்றாலம் மெயின் அருவியில் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மீட்கப்பட்டது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் சுமார் எட்டு அடி நீளமுள்ள மலைப்பாம்பு இருப்பதாக அங்குள்ள சுற்றுலாப் பயணிகள் தென்காசி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்ற தென்காசி தீயணைப்பு மீட்பு படையினர் குற்றால அருவியில் பதுங்கி இருந்த மலைப்பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறை இடம் ஒப்படைத்தனர். மேலும் இந்த சேவையை செய்த தீயணைப்பு துறையினரை சுற்றுலா பயணிகளும் அப்பகுதி பொதுமக்களும் வெகுவாக பாராட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story