தம்மம்பட்டியில் 8 அடி நீள மலைப்பாம்பு மீட்பு

தம்மம்பட்டியில் 8 அடி நீள மலைப்பாம்பு மீட்பு
மலைப்பாம்பு மீட்பு 
சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் தம்மம்பட்டி 1வது வார்டு பகுதியை சேர்ந்தவர் விவசாயி சந்திரன். இவர் நேற்று தனது நிலத்தில் விவசாய பணிகள் மேற்கொண்டார். அப்போது விவசாய நிலத்தில் சுமார் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு இருந்ததைபார்த்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து கெங்கவல்லி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். நிலைய அலுவலர் (பொ) செல்லப்பாண்டியன் தலைமையில் வந்த தீயணைப்பு வீரர்கள், விளைநிலத்தின் புதர்பகுதியில் மறைந்திருந்த 8 அடி நீள மலைப்பாம்பை பிடித்து, அருகில் இருந்த காப்புக் காட்டில் விடுவித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Tags

Next Story