சங்கராபுரம் அருகே கடைக்குள் புகுந்த நாக பாம்பு மீட்பு

சங்கராபுரம் அருகே கடைக்குள் புகுந்த நாக பாம்பு மீட்பு

மீட்கப்பட்ட நாகப்பாம்பு 

சங்கராபுரம் அருகே கடைக்குள் புகுந்த நாக பாம்பை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வனப்பகுதிக்குள் விட்டனர்.

சங்கராபுரம் அடுத்த எஸ்.குளத்துார் பகுதியைச் சேர்ந்தவர் ராஜதுரை.இவர்,திருவண்ணாமாலை சாலையில் கடப்பா கல் விற்கும் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடைக்குள் நேற்று காலை 6 அடி நீளமுள்ள நாக பாம்பு பகுந்தது. இதைப் பார்த்த ராஜதுரை சங்கராபுரம் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தார்.தீயணைப்பு அலுவலர் (பொறுப்பு) ரமேஷ்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று நாக பாம்பை உயிருடன் மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.

Tags

Next Story