வெப்படை அருகே கிணற்றில் விழுந்த பசு மீட்பு

வெப்படை அருகே கிணற்றில் விழுந்த பசு மீட்பு

மாட்டை மீட்ட தீயணைப்பு படை வீரர்கள்

வெப்படை அருகே கிணற்றில் விழுந்த பசுவை குமாரபாளையம் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் மீட்டனர்.

நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே புது மண்டபத்தூர் பகுதியில் தங்கவேல், 45, என்பவருக்கு சொந்தமான மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. அதில் பசுமாடு ஒன்று நிலை தடுமாறி அங்குள்ள விவசாய கிணற்றில் விழுந்தது. இது பற்றி குமாரபாளையம் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

நேரில் சென்ற மீட்பு படையினர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி பசுமாட்டை நல்ல நிலையில் மீட்டனர். அப்பகுதியினர் மீட்பு படையினருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

வெப்படை தீயணைப்பு படையினர் திருச்செங்கோடு தனியார் கல்லூரியில் ஓட்டு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் இருப்பதால், குமாரபாளையம் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் பசு மாட்டினை நேரில் வந்து மீட்டதாக மீட்பு படையினர் கூறினர்.

Tags

Next Story