கிணற்றில் தவறி விழுந்த மான் சடலமாக மீட்பு

கடத்தூர் அருகே நாய் துரத்தி வந்ததில் கிணற்றில் தவறி விழுந்த மான் சடலமாக மீட்பு
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடத்தூர் அருகே தாளநத்தம் ஊராட்சி, ரயில்வே கேட் அருகே அன் வர்பாஷா, விவசாயி. நேற்று இரவு, இவரது விவசாய தோட்டத்திற்கு தண்ணீர் தேடி ஆண்மான் ஒன்று வந்ததது. அப்போது, அங்கிருந்த நாய் துரத்தியதில், பயந்து ஓடிய மான் விவசாய கிணற்றில் தவறி விழுந்தது. இன்று காலை அன்வர்பாஷா தோட்டத்திற்கு சென்று பார்த்த போது, மான் கிணற்றில் விழுந்து இறந்து கிடந்தது தெரியவந்தது. இது குறித்து அவர் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த மொரப்பூர் வனத்துறையினர், கிணற்றில் இறந்து கிடந்த மானை கயிறு கட்டி மேலே எடுத்தனர். பின்னர் பிரேத பரிசோதனை செய்து, விவசாய நிலத்தில் புதைத்தனர்

Tags

Next Story