கிணற்றில் தவறி விழுந்த ஆண் மயில் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த ஆண் மயில் மீட்பு

ஆலங்குளத்தில் கிணற்றில் தவறி விழுந்த ஆண் மயில் பத்திரமாக மீட்கப்பட்டது.


ஆலங்குளத்தில் கிணற்றில் தவறி விழுந்த ஆண் மயில் பத்திரமாக மீட்கப்பட்டது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ஐந்தாம் கட்டளை நடுத்தெருவை சேர்ந்த தங்கராஜ் என்பவருடைய சாஸ்தா கோவில் அருகே உள்ள கிணற்றில் தேசிய பறவையான ஆண்மயில் சுமார் 60 அடி கிணற்றில் அருகே தண்ணீர் தேடி சென்ற போது எதிர்பாரவிதமாக தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் ஆலங்குளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் இடத்திற்கு சென்று கிணற்றில் தவறி விழுந்த மயிலே கயிறு கட்டி பத்திரமாக மீட்டு அப்பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் விட்டனர். இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்புத் துறையினரை வெகுவாக பாராட்டினார்.

Tags

Read MoreRead Less
Next Story