திருத்தணி அருகே வீட்டில் பதுங்கி இருந்த மலைப்பாம்பு மீட்பு.

திருத்தணி அருகே வீட்டில் பதுங்கி இருந்த மலைப்பாம்பு மீட்பு.

மீட்கப்பட்ட மலைப்பாம்பு 

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியம் கன்னிகாபுரம் கிராமத்தில் வசிப்பவர் சுப்பிரமணி (55). விவசாயி. இவரின் வீட்டின் அருகே கன்னிகாபுரம் காப்புக்காடு உள்ள நிலையில் இரவு சுப்பிரமணியின் வீட்டின் பின்புறத்தில் மலைப்பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் திருத்தணி தீயணைப்புதுறையினர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மலைப்பாம்பு வீட்டைச்சுற்றி அங்கும் இங்கும் நெளிந்து திரிந்ததால் வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேரம் போராடி மரக்கட்டைகளுக்கு இடையில் இருந்த மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் பிடிபட்ட 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை சாக்குப்பையில் கட்டி திருத்தணி அருகே உள்ள வனப்பகுதியில் பத்திரமாக விட்டனர். விரைந்து வந்து பாம்பு பிடித்த தீயணைப்பு வீரர்களுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags

Next Story