ஆத்தூர் அருகே தோட்டத்தில் இருந்த மலைப்பாம்பு மீட்பு

ஆத்தூர் அருகே தோட்டத்தில் இருந்த மலைப்பாம்பு மீட்பு

மலைப்பாம்பு 

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட கன்னிவாடி பகுதியில் வேலுச்சாமி என்பவர் தோட்டத்தில் சுமார் 10 அடி நீளமுள்ள மலை பாம்பு ஒன்று இருந்துள்ளது. இதை அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்கள் பார்த்துள்ளனர். பாம்பின் அருகே சென்றபோது பாம்பு சீறியுள்ளது.இதனால் அவர்கள் ஓட்டம் பிடித்துள்ளனர்.இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ராஜேந்திரன் தலைமையிலான தீயணைப்பு துறையினர் பாம்பை பிடித்து கன்னிவாடி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் பாம்பு அடர்ந்த வனத்துக்குள் விடப்பட்டது.

Tags

Next Story