திருவள்ளூரில் வீட்டிற்குள் புகுந்த சாரை பாம்பு மீட்பு

திருவள்ளூரில் வீட்டிற்குள் புகுந்த சாரை பாம்பு மீட்பு
மீட்கப்பட்ட பாம்பு 
திருவள்ளூரில் வீட்டிற்குள் புகுந்த ஆறடி நீள சாரை பாம்பை தீயணைப்பு வீரர்கள் மீட்டு காட்டுப்பகுதியில் விடுவித்தனர்.
திருவள்ளூர், பூங்கா நகர் பவளமல்லி தெருவில் சேவியர் பிரான்சிஸ் என்ற மின்வாரிய அதிகாரி வீட்டிற்குள், நேற்று முன்தினம் மாலை சாரை பாம்பு புகுந்தது. இதுகுறித்து, சேவியர் பிரான்சிஸ் கொடுத்த தகவலின் பேரில், திருவள்ளூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, சாரை பாம்பை லாவகமாக பிடித்தனர். பிடிபட்ட பாம்பினை, காட்டுப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர்.

Tags

Next Story