கிணற்றிலிருந்து அம்மன் சிலை மீட்பு

கிணற்றிலிருந்து அம்மன் சிலை மீட்பு

கிணற்றிலிருந்து அம்மன் சிலை மீட்பு

சிங்கிலிக்கம்பட்டியில், கிணற்றில் 22 அடி ஆழமுள்ள தண்ணீரில் இருந்து அம்மன் சிலை பத்திரமாக மீட்கப்பட்டது.
வேடசந்துார், : கல்வார்பட்டி ஊராட்சி சிங்கிலிக்கம்பட்டியில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு சொந்தமான குலதெய்வக் கோயில் உள்ளது.5 மாதங்களுக்கு முன் கோயிலிலிருந்த வீர சின்னார் அம்மன் சிலை காணாமல் போனது. கூம்பூர் போலீசில் கோயில் நிர்வாகிகள் புகார் அளித்தநிலையில் ஊர் அருகே உள்ள கிணற்றில் சிலை இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆழ்துளை கிணறு அமைக்கும் தொழிலாளர்கள் நவீன கேமராவை கிணற்றுக்குள் இறக்கி சோதனை செய்தனர். அப்போது சிலை கிணற்றுக்குள் இருப்பது தெரிந்தது. 4 நீச்சல் வீரர்கள் 22 அடி ஆழமுள்ள தண்ணீருக்குள் இருந்த சிலையை பத்திரமாக மீட்டனர். மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags

Next Story