கிணற்றில் விழுந்த புள்ளி மான் மீட்பு

கிணற்றில் விழுந்த புள்ளி மான் மீட்பு

கிணற்றில் விழுந்த புள்ளி மான் மீட்பு

70 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் 2 வயதுள்ள ஆண் புள்ளிமான் தவறி விழுந்த நிலையில் அதனை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்.
கெங்கவல்லி:ஆத்தூர் அருகே, பைத்தூர் கிராமத்தில் உள்ள 70 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் நேற்று 2 வயதுள்ள ஆண் புள்ளிமான் தவறி விழுந்து விட்டதாக கிராம மக்கள் தீயணைப்பு நிலைய அலுவலர் அசோகனுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, வந்த ஆத்தூர் தீயணைப்பு துறையினர் கிணற்றில் விழுந்த மானை கிணற்றில் இறங்கி உயிருடன் மீட்டனர். மீட்கப்பட்ட மானை தம்மம்பட்டி வன காவலர் முருகேசனிடம் ஒப்படைத்தனர்.

Tags

Next Story