அரிய வகை மர நாய் குட்டிகள் மீட்பு

ராமநாதபுரம் கரும்பு கொள்ளையில் உள்ள ஒரு வீட்டில் அரிய வகை 3 மரநாய் குட்டிகளை வனத்துறையினர் மீட்டனர்.
ராமநாதபுரம் பெரியார் நகர், கரும்பு கொள்ளையில் இந்திரா என்பவர் மகனுடன் வசித்துவருகிறார். இவர் வீட்டில் நேற்றிரவு சமையல் அறை மேல் தட்டில் வினோதமான சத்தம் கேட்டுள்ளது. உடனே சத்தம் கேட்ட மேல்தட்டை எட்டி பார்த்தபோது 3 மரநாய் குட்டிகள் இருந்ததை கண்டதும் வனத்துறையினர், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் இணைந்து தகுந்த பாதுகாப்பு உடைகள் அணிந்து வந்து மரநாய்களை பத்திரமாக மீட்டு கொண்டு சென்றனர்.

Tags

Next Story