குளத்தில் தவறி விழுந்த கன்று குட்டி மீட்பு

குளத்தில் தவறி விழுந்த கன்று குட்டி மீட்பு

குளத்தில் வீழ்ந்த கன்றுக்குட்டி மீட்பு 

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் குளத்தில் தவறி விழுந்த கன்று குட்டியை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி செக்காலை சிவன் கோவில் எதிரே கோவில் குளம் உள்ளது. இந்த குளத்தில் தாமரைக்கொடி அதிக அளவில் படர்ந்து உள்ளது. இங்கு தண்ணீர் குடிக்க சென்ற கன்று குட்டி ஒன்று தவறி விழுந்தது. நீண்ட நேரமாக தாமரைக் கொடியில் சிக்கிய கன்று குட்டி வெளியேற முடியாமல் தத்தளித்தது.

இதை பார்த்த கோயிலுக்கு வந்த பக்தர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து விரைந்து வந்த காரைக்குடி தீயணைப்புத் துறையினர் குளத்துக்குள் இறங்கி கன்று குட்டியை மீட்டு கரையில் விட்டனர்.

Tags

Next Story