கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மான் மீட்பு!

கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மான் மீட்பு!

வந்தவாசி அருகே கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மானை தீயணைப்பு வீரர்கள் மீட்டு காட்டில் விட்டனர்.


வந்தவாசி அருகே கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மானை தீயணைப்பு வீரர்கள் மீட்டு காட்டில் விட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த காவணியாத்தூர் கிராமத்தில் சந்தோஷ் என்பவரது விவசாயக் கிணற்றில் 3 வயதுள்ள ஆண் புள்ளி மான் ஒன்று தவறி விழுந்துள்ளது.இதுகுறித்து வந்தவாசி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி மானை கயிறு கட்டி மீட்டனர். இதைத் தொடர்ந்து பாதூர் காப்புக்காட்டில் புள்ளி மான் விடப்பட்டது.

Tags

Next Story