கொத்தடிமையாக வாத்து மேய்த்த இரு சிறுவர்கள் மீட்பு

கொத்தடிமையாக வாத்து  மேய்த்த இரு சிறுவர்கள் மீட்பு

தஞ்சாவூர் அருகே கொத்தடிமையாக வாத்து மேய்த்துக் கொண்டிருந்த 2 சிறுவர்கள் சனிக்கிழமை மீட்கப்பட்டனர்.


தஞ்சாவூர் அருகே கொத்தடிமையாக வாத்து மேய்த்துக் கொண்டிருந்த 2 சிறுவர்கள் சனிக்கிழமை மீட்கப்பட்டனர்.

தஞ்சாவூர் அருகே கொத்தடிமையாக வாத்து மேய்த்துக் கொண்டிருந்த 2 சிறுவர்கள் சனிக்கிழமை மீட்கப்பட்டனர். தஞ்சாவூர் அருகே, மருங்குளத்தில் உள்ள விளைநிலத்தில் 2 சிறுவர்கள் கொத்தடிமையாக வாத்து மேய்த்துக் கொண்டிருப்பதாக சைல்டு லைன் அமைப்புக்கு தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து, தொழிலாளர் துறை, மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு, வருவாய்த் துறை அலுவலர்கள் மருங்குளத்தில் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 10 மற்றும் 13 வயது சிறுவர்கள் கொத்தடிமையாக வாத்து மேய்த்துக் கொண்டிருப்பதும், இருவரது பெற்றோர்களிடம் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த லட்சுமணன் தலா ரூ. 30 ஆயிரம் கொடுத்து, இருவரையும் அழைத்து வந்திருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, இரு சிறுவர்களையும் அலுவலர்கள் மீட்டனர். இது குறித்து வல்லம் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து லட்சுமணனை தேடி வருகின்றனர்.

Tags

Next Story