அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு - போலீசார் விசாரணை

அழுகிய நிலையில் பெண் சடலம்  மீட்பு - போலீசார் விசாரணை

காவல் நிலையம் 

முல்லை பெரியாற்றில் அழுகிய நிலையில் இருந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி அருகே அரண்மனை புதூர் முல்லைப் பெரியாற்றில் அழுகிய நிலையில் பெண் சடலம் மிதப்பதாக பழனிசெட்டிபட்டி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அடையாளம் தெரியாத சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் உடலை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்

Tags

Next Story