கிணற்றில் விழுந்த காட்டு பன்றிகள் உயிருடன் மீட்பு

கிணற்றில் விழுந்த காட்டு பன்றிகள் உயிருடன் மீட்பு

தென்காசி அருகே கிணற்றில் விழுந்த காட்டு பன்றிகள் உயிருடன் மீட்கப்பட்டன.


தென்காசி அருகே கிணற்றில் விழுந்த காட்டு பன்றிகள் உயிருடன் மீட்கப்பட்டன.
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள துவரங்காடு கிராமத்தில் விவசாய கிணற்றில் காட்டுப்பன்றிகள் விழுந்து தத்தளித்து வந்தன. அதனை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சுரண்டை தீயணைப்பு மீட்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் கிணற்றில் விழுந்த காட்டு பன்றிகளை உயிருடன் மீட்டனர். இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்பு துறையினரை வெகுவாக பாராட்டினர்.

Tags

Next Story