திருவேங்கடத்தில் கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதி

திருவேங்கடத்தில் கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதி

தேங்கி நிற்கும் கழிவுநீர்

திருவேங்கடத்தில் கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் உள்ள திருவேங்கடம் பகுதியில் உள்ள என்,ஜி,ஓ காலனியில் 500-க்கும் மேற்பட்டோர் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். ஆனால் இங்கு முறையான சாக்கடை கால்வாய் வசதி இல்லை. ஏற்கனவே அமைக்கப்பட்ட சாக்கடை கால்வாய் வழியாக கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்கிறது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், தேங்கி நிற்கும் கழிவுநீரில் கொசுபுழுக்கள் அதிகரித்து, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. கழிவுநீர் செல்ல வெட்டப்பட்ட கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்கின்றது.

இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாக்கடை கால்வாய் தேங்கி நிற்கும் கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Tags

Next Story