குடியிருப்புக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி

குடியிருப்புக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே வாகைகுளம் பகுதியில் குடியிருப்புக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி; வயதான மூதாட்டி உயிரிழப்பு; இரண்டு வீடுகள் இடிந்து சேதம்.
வாகைகுளம் பகுதியில் குடியிருப்புக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
வடகிழக்கு பருவ மழையால் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள வேலாயுதபுரம் சத்திரப்பட்டி வாகைகுளம் பகுதிகளில் உள்ள கண்மாய்களில் நீர் வரத்து அதிகரித்துள்ளது தொடர்ந்து சாரல் மழை பெய்து வரும் நிலையில் கண்மாயிலிருந்து வெளியேறும் நீர்கள் வெளியே செல்ல வழி இல்லாமல் ஓடையில் நிரம்பி வழிவதால் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர் . வாகைகுளம் பட்டி பகுதியில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்த நிலையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சங்கிலியூர் என்ற 80 வயது மூதாட்டி வீட்டில்திடீரென மழை நீர் வீட்டுக்குள் புகுந்ததால் மூக்கில் தண்ணீர் சென்று உயிரிழந்து விட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர் மழைநீர் புகுந்ததால் 2 வீடுகள் இடிந்து விழுந்தது பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு நிவாரண வழங்க அரசு முன்னுர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story