சடலத்தை அடக்கம் செய்ய எதிர்ப்பு - சாலை மறியல்

சடலத்தை அடக்கம் செய்ய எதிர்ப்பு - சாலை மறியல்

சாலை மறியல் 

மேட்டூர் அருகே சடலத்தை அடக்கம் செய்ய ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் மற்றொரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம் ,மேட்டூர் அருகே கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் சத்யா நகரை சேர்ந்தவர் ஒஜீர் (85) வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது சடலத்தை இஸ்லாமியர்கள் சுமந்து வந்தனர் அப்போது அங்கிருந்த ஒரு சமூகத்தினர் மரித்தனர் இதனால் இரு தரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது .இஸ்லாமியர்கள் சடலத்தை எடுத்து தங்களது மயானத்திற்கு கொண்டு சென்றனர். சடலத்தை அடக்கம் செய்ய ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் சடலத்தை மயானத்திலேயே வைத்துவிட்டு இஸ்லாமியர்கள் கொளத்தூர் மைசூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் கொளத்தூர் மைசூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சார் ஆட்சியர் பொன்மணி மற்றும் காவல்துறை வருவாய்த்துறை அதிகாரிகள் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து சடலம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. பின்னர் சாலை மறியல் ஈடுபட்டவர்கள் களைந்து சென்றனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story