மூங்கில்துறைப்பட்டு அருகே டிரான்ஸ்பார்மரை மாற்ற எதிர்ப்பு

மூங்கில்துறைப்பட்டு அருகே டிரான்ஸ்பார்மரை மாற்ற எதிர்ப்பு

மூங்கில்துறைப்பட்டு அருகே மின்மாற்றி மாற்ற எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.


மூங்கில்துறைப்பட்டு அருகே மின்மாற்றி மாற்ற எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

மூங்கில்துறைப்பட்டு அருகே மின்மாற்றி மாற்ற எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. மூங்கில்துறைப்பட்டு அடுத்த சுத்தமலை செல்லும் சாலையில் டிரான்ஸ்பார்மர் ஒன்று உள்ளது. இதன்மூலம் அப்பகுதி உள்ள விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர். இதில் உள்ள மின்மாற்றியை ஊழியர்கள் கழற்றி எடுத்துச் சென்று மற்றொரு பகுதியில் பொருத்த ஏற்பாடு செய்தனர்.

தகவல் அறிந்து வந்த அப்பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் மின்மாற்றியை வேறு இடத்திற்கு கொண்டு செல்ல கூடாது என்று கூறி, மின்வாரிய ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கு மின்மாற்றி வேறொரு இடத்திற்கு கொண்டு சென்று அப்பகுதியில் வைக்க வேண்டும் என்பதால் கழட்டி எடுத்துச் செல்கிறோம் என, மின்துறை அதிகாரிகள் தெரிவித்ததாக, கூறினர்.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து இப்பகுதியில் உள்ள மின்மாற்றியை வேறொரு இடத்திற்கு கொண்டு சென்றால், இப்பகுதியில் மின் தடை ஏற்படும். இப்பகுதி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர். மின் மாற்றியை மாற்றினால் நாங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர். மின்வாரிய ஊழியர்கள் கேட்காததால் விவசாயிகள் டிரான்ஸ்பார்மர் முன், போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து மின்வாரிய ஊழியர்கள் விசாரணை மேற்கொண்டனர்.

Tags

Next Story