செய்யாறு சப் கலெக்டர் அலுவலகத்தில் 67 மனுக்களுக்கு தீர்வு

செய்யாறு சப் கலெக்டர் அலுவலகத்தில் 67 மனுக்களுக்கு தீர்வு

மனு வழங்கல்

செய்யாறு சப் கலெக்டர் அலுவலகத்தில் 67 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

செய்யாறு சப் கலெக்டர் அலுவலகத்தில் சப்-கலெக்டர் பல்லவி வர்மா தலைமையில் கோட்ட அள விலான மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. இதில் பொது மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 67 மனுக்கள் நேரடியாக பெற்றுக்கொள்ளப்பட்டன.

மக்கள் குறை தீர்க்கும் நாளில் வீட்டுமனை பட்டா கோரி 6 மனுக்களும், 1 யூடி ஆர் திருத்தமும், 8 பேர் ஆக்கிரமிப்பு அகற்ற கோரியும், 15 பேர் பட்டா மாற்றமும், தமிழ்நிலம் திருத்தம் 8 மனுக்களும், 1கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கோரியும் நில அளவை செய்ய 5 பேரும், 23 பேர் இதர துறை மனுக்கள் என மொத்தம் 67 மனுக்கள் பெறப்பட்டன.

பெறப்பட்ட மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவ லர்களிடம் வழங்கி உடனடி நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிட்டார் இநிகழ்ச்சியில் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட வரு வாய்த்துறை மற்றும் இதரத் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story