கடையநல்லூா் நகராட்சியில் 28 பேரின் மனுக்களுக்கு தீா்வு

கடையநல்லூா் நகராட்சியில் 28 பேரின் மனுக்களுக்கு தீா்வு
கடையநல்லூர் நகராட்சி மன்ற கூட்டத்தில் 28 பேரின் கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டன.
கடையநல்லூர் நகராட்சி மன்ற கூட்டத்தில் 28 பேரின் கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டன.

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் நகராட்சியைச் சோ்ந்த 28 பேரின் மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு ஆணைகள் வழங்கப்பட்டன. கடையநல்லூா் நகராட்சிக்குள்பட்ட 33 வாா்டு பொதுமக்களும் பயன்பெறும் வகையில் பல கட்டங்களாக மக்களுடன் முதல்வா் முகாம் நடைபெற்றது. இதில் , சொத்து வரி பெயா் மாற்றம், புதிய குடிநீா் இணைப்பு கோருதல் உள்ளிட்ட மனுக்கள் பெறப்பட்டன.

இதில் முதல்கட்டமாக 28 மனுக்களுக்கு தீா்வு காணும் வகையில் பயனாளிகளுக்கு உரிய ஆணைகளை நகா்மன்றத் தலைவா் ஹபீபுர்ரஹ்மான் வழங்கினாா். நகராட்சி ஆணையா் சுகந்தி, மேலாளா் சண்முகவேலு, சுகாதார அலுவலா் பிச்சையாபாஸ்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story