சேலம் மாநகரில் ஊர்வலம், கூட்டம் நடத்த கட்டுப்பாடு

சேலம் மாநகரில் ஊர்வலம், கூட்டம் நடத்த கட்டுப்பாடு

மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி

சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சேலம் மாநகரில் அரசியல் கட்சிகள், பல்வேறு சங்கங்கள், அமைப்பினர் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டம், ஊர்வலம் ஆகியவற்றிற்கு, தமிழ்நாடு மாநகர போலீஸ் சட்டப்படி, கமிஷனர் அனுமதி பெற்று நடத்த வேண்டும். மேலும் இதற்கு, 5 நாட்களுக்கு முன்னதாகவே விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட மாட்டாது. அதேசமயம் விளையாட்டு நிகழ்ச்சிகள், திருமண நிகழ்வுகள், இறந்தோர் இறுதி ஊர்வலங்கள், மத நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகளுக்கு இது பொருந்தாது. இந்த உத்தரவு வருகிற 9-ந் தேதி வரை அமலில் இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story