மண் அரிப்பை தடுக்க தடுப்பு சுவர் அமைப்பு

மண் அரிப்பை தடுக்க தடுப்பு சுவர் அமைப்பு

தடுப்பு சுவர் 

மண் அரிப்பை தடுக்க தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் - செங்கல்பட்டு இருவழி சாலை, 448 கோடி ரூபாய் செலவில், நான்குவழி சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது. இருப்பினும், காஞ்சிபுரம் - செங்கல்பட்டு இணைப்பு சாலையில் இருந்து, கீழ்ஓட்டிவாக்கம் கிராமத்திற்கு செல்லும் மண் சாலைக்கு, 40 லட்ச ரூபாய் செலவில், சிறிய தண்ணீர் தரைப்பாலம் மற்றும் புதிய தார் சாலை போடப்பட்டு உள்ளது.

சாலை ஓரம், தனியாருக்கு சொந்தமான நிலம் இருப்பதால், மண் அணைக்கவில்லை. இதனால், புதிதாக போட்ட தார் சாலை சரிந்து விழுந்துள்ளது. மேலும், தண்ணீர் செல்லும் சாலை, மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த சாலை வழியாக செல்லும் வாகனங்கள் நிலை தடுமாறி கவிழும் நிலை இருந்தது. இதுகுறித்தான செய்தி நம் நாளிதழில் வெளியானதை தொடர்ந்து, தனி நபருக்கு சொந்தமான நிலத்தில் ஓரத்தில் ஹோலோ பிளாக் கற்கள் அடுக்கி சிமென்ட் பூச்சு பூசப்பட்டு, வெள்ளையடிக்கப்பட்டு உள்ளது.

Tags

Next Story