புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய கோரி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் தர்ணா

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய கோரி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் தர்ணா

தர்ணாவில் ஈடுபட்ட ஒய்வு பெற்ற ஆசிரியர்கள்

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நல சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடியில் ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நல சங்கம் சார்பில் தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தில் பணமில்லா சிகிச்சையை நடைமுறைப்படுத்த வேண்டும், 70 வயது மற்றும் 80 வயது நிறைந்த ஆசிரியர்களுக்கு 10% முதல் 20 சதவிகித கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், மத்திய அரசு மூத்த குடிமக்களுக்கான ரயில் பயண கட்டண சலுகையை உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்

Tags

Next Story