ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம் 

சேலத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சேலம் ராமகிருஷ்ணா ரோட்டில் அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு நேற்று போக்குவரத்து கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மண்டல தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். 98 மாத பஞ்சப்படியை வழங்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்பை உடனே அமல்படுத்த வேண்டும். பென்சனுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பங்கேற்றவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷடமிட்டனர்.

Tags

Next Story