32 வருடங்களுக்கு முன்பு அரசு பள்ளியில் படித்த மாணவ மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி !

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அரசு பள்ளியில் 32 வருடங்களுக்கு முன்பு 12ஆம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இராசிபுரம் அண்ணா சாலையில் உள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளியில் கடந்த, 1992-ஆம் ஆண்டு, 12ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவ, மாணவிகள் சந்தித்துக் கொண்டனர். சுமார், 32 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற இந்த சந்திப்பு நிகழ்ச்சிக்கு மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். முன்னதாக முன்னாள் பள்ளி மாணவர்கள் சார்பில் பள்ளியின் புதிய நுழைவு வாயில் மற்றும் கதவுகள் 3 வருடங்களுக்கு முன்பு வழங்கப்பட்டது.

இதனையடுத்து, நேற்று முன்தினம் 40 மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களது ஆசிரியர்கள் பங்கு பெற்ற சந்திப்பு நிகழ்ச்சி சேலம் ரோட்டில் அமைந்துள்ள ஹோட்டல் சாந்தி இண் -ல் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் ஆசிரியர்களான இராமசாமி, குமரவேல், வஜ்ரவேல், சரோஜினி, சாமிநாதன், செல்வராஜ், குமாரசாமி, துரைசாமி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். முன்னாள் ஆசிரியர்ளுக்கு நினைவு கேடயம் வழங்கப்பட்டது. மேலும், மாணவர்கள் அழைப்பினை ஏற்று வந்திருந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு மதிய விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

Tags

Next Story