தஞ்சாவூரில் வருவாய்த்துறை தினக்கொடியேற்று விழா

தஞ்சாவூரில் வருவாய்த்துறை தினக்கொடியேற்று விழா

கொடியேற்று விழா 

தஞ்சாவூரில் வருவாய்த்துறை தினத்தை முன்னிட்டு வருவாய் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கொடியேற்று விழா நடந்தது.
தஞ்சாவூரில் வருவாய்த்துறை தினத்தை முன்னிட்டு, தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, வருவாய் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு சங்கத்தின் வட்டத் தலைவர் எஸ்.கோவிந்தராஜ் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் பார்த்தசாரதி கொடியேற்றி சிறப்புரையாற்றினார். வட்டாட்சியர் அருள்ராஜ், வட்டச் செயலாளர் ஆர். சரவணன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் எஸ். கோதண்டபாணி, அரசு ஊழியர் சங்க வடக்கு வட்டச் செயலாளர் அஜய் ராஜ், சங்க நிர்வாகி விஜயபாஸ்கர் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். வட்ட துணைச் செயலாளர் பழனிகுமார் நிறைவுறையாற்றினார் முன்னதாக தனித்துணை வட்டாட்சியர் எம்.மதியழகன் வரவேற்றார். நிறைவாக சங்கத்தின் வட்டார பொருளாளர் எஸ்.ஆர். வினோத் நன்றி கூறினார்.

Tags

Next Story