தேர்தல் பொதுக்கூட்டங்கள் நடத்த வருவாய் துறையினர் அனுமதி

தேர்தல் பொதுக்கூட்டங்கள் நடத்த வருவாய் துறையினர் அனுமதி

வருவாய்த் துறை

திண்டுக்கல் மாவட்டத்தில் 76 இடங்களில் தேர்தல் பொதுக்கூட்டங்கள், 254 இடங்களில் தெருமுனை கூட்டங்கள் நடத்த வருவாய் துறையினரால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், கரூர் ஆகிய இரண்டு தொகுதிகள் வருகின்றன. அரசியல் கட்சிகள் வேட்பாளர் தேர்வில் தீவிரம் காட்டி வருகின்றன. வேடசந்தூர் தொகுதி கரூர் மாவட்டத்திற்கு செல்கிறது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக்கி உள்ளன. அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு இடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தைத் தவிர வேறு இடத்தில் பொதுக்கூட்டம் தெருமுனைப் பிரச்சாரம் ஆகிய நடத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல்லில் 76இடங்களில் பொதுக் கூட்டங்களும், 254 இடங்களில் தெருமுனை கூட்டங்களும் நடத்த வருவாய்த் துறையினரால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story